நான் யார் என்று ஒவ்வொருவனும் கேட்கும் பொழுது கிடைக்கும் பதிலில் சில ...
பொய்யை பொய்யாக
மெய் போல காட்டும் மனிதர்களின் மத்தியில்,
நானும் ஒருவன்..
மனிதம் இன்னும் உள்ளதென
மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்தர்களில்
நானும் ஒருவன்..
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு முன்னாள்
தோன்றிய மூத்த குடியில் பிறந்தவன் என்று
மார் தட்டி கொள்ளும் மைந்தர்களில்
நானும் ஒருவன்..
கனவுகளை கனவாகவே கை விட்டு
கடமைக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் கல் நெஞ்சக்காரர்களில்
நானும் ஒருவன் ..
இயற்கைசீற்றங்களால் அழிந்து போன லெமூரியா கண்டம் போல நம்
இயல் இசை நாடகத் தமிழ் கண்டம் ஆகிடுமோ என்று கலங்கும் காளைகளில் நானும் ஒருவன்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக