வியாழன், 20 ஆகஸ்ட், 2009

குறுந்தகவல் குறுங்கவிதை..

விலகி விலகிச் சென்றாலும்
விரட்டிக்கொள்ளும் பார்வை உனது ..
பழகியவர்கள் பரிகசித்தாலும் அதை
மறைக்கும் புன்னகை உனது..
உலகையே உலவினாலும் உன் நினைவு
உண்டென்கிறது என் மனது ..

உன் விழிகளைக் கண்டாலே
என் நரம்பெல்லாம் மின்சாரம் ..
உனை நினைத்து உருகியே
போகிறது என் நேரம்..
நீ பேசிய வார்தைகள்
என் செவிகளுக்குள் ரீங்காரம்
எப்போது நீ தருவாய் உனக்குள்
ஒருவனை எனக்கோர் அங்கீகாரம்.

உன் பேரைச்சொல்ல சொல்ல
என் மனம் பறக்குது மேல
இத உனக்கு நான் சொல்ல
என்னருகில் நீ இல்ல
கனவிலும் கண்ணிலும் மட்டுமல்ல
என் நினைவெல்லாம் நீதான் புள்ள
உன்ன நான் பார்த்தது என் தப்பில்ல
இது ஆண்டவன் கட்டளை