புதன், 29 ஏப்ரல், 2009

எங்கே நீ

எங்கேயடி நீ ?

வாரம் ஒன்றும் ஓடி போனது உன் வான் மிதக்கும் கண்களைக் கண்டு
நேரம் போனது தெரியாமல் உனை நினைத்து உருகும் உள்ளம் இங்கு உண்டு

பூவைச் சுற்றிப் பறக்கத்தான் வண்டு -உன் போல்
பூவையரைச் சுற்றிப் பறக்கவே நானும் உண்டு..
எங்கே எங்கே நீ எங்கே .. ?







ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

நானும் ஒருவன்

நான் யார் என்று ஒவ்வொருவனும் கேட்கும் பொழுது கிடைக்கும் பதிலில் சில ...

பொய்யை பொய்யாக
மெய் போல காட்டும் மனிதர்களின் மத்தியில்,
நானும் ஒருவன்..

மனிதம் இன்னும் உள்ளதென
மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்தர்களில்
நானும் ஒருவன்..

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு முன்னாள்
தோன்றிய மூத்த குடியில் பிறந்தவன் என்று
மார் தட்டி கொள்ளும் மைந்தர்களில்
நானும் ஒருவன்..

கனவுகளை கனவாகவே கை விட்டு
கடமைக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் கல் நெஞ்சக்காரர்களில்
நானும் ஒருவன் ..

இயற்கைசீற்றங்களால் அழிந்து போன லெமூரியா கண்டம் போல நம்
இயல் இசை நாடகத் தமிழ் கண்டம் ஆகிடுமோ என்று கலங்கும் காளைகளில் நானும் ஒருவன்..